நீரின்றி அமையாது உலகு” என்று திருவள்ளுவர் அன்றே சொல்லி இருக்கார். அதுபோல தான், உலகில் வாழக்கூடிய அனைத்து உயிர்களுக்கும், தண்ணீர் மிகவும் அவசியமான ஒன்ற இருக்கு. தண்ணீர் இயற்கையின் ஒரு வரப்பிரசாதமாகும். இத்தகைய தண்ணீரானது தாகத்தை தணிப்பதோடு மட்டுமல்லாது, உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைத் தரக்கூடியதும் கூட. பொதுவாக உடலில் ஏற்படும் நோய்களானது, வயிற்றில் தான் உற்பத்தியாகிறது. எனவே வயிற்றை சுத்தமாக வைத்துக் கொண்டால், நோய்கள் வராமல் தடுக்கலாம். அதற்கு தண்ணீர் தான் பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், நமக்கு கிடைக்ககூடிய நன்மைகள் என்ன என்னனு பாக்கலாம் வாங்க வீடியோ குள்ள.
குடல்
சுத்தமாகும்:
அதிகாலையில் வெறும் வயிற்றில்
தண்ணீர் குடிப்பதால், கிடைக்ககூடிய நன்மைகளில் முதன்மையாது, குடல் சுத்தமாகும்.
அதற்கு காரணம் என்னன்னா தண்ணீர் குடித்தவுடன், சிறிது நேரத்திலேயே மலம்
கழிக்கக்கூடும். இப்படி தினமும் தவறாமல் மலம்
கழித்தாலேயே, உடலில் உள்ள கழிவுகள் முற்றிலும்
வெளியேறிவிடும்.
அதுமட்டும் இல்லமா, தண்ணீரானது உடலின் மூலைமுடுக்குகளில் உள்ள நச்சுக்களை சிறுநீர்
மூலமாக வெளியேற்றிவிடும்.
பசியைத் தூண்டும்:
தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்கள் வெளியேறி, விரைவில் பசி எடுக்க ஆரம்பித்துவிடும்.
தலைவலியை தடுக்கும்:
பெரும்பாலானோருக்கு உடலில் நீர்ச்சத்து குறைவாக
இருப்பதால் தலைவலி அடிக்கடி ஏற்படும். அத்தகையவர்கள் தினமும் அதிகாலையில் வெறும்
வயிற்றில் தாண்ணீர் குடித்து வந்தால், உடலின் நீர்ச்சத்தானது அதிகரித்து, தலைவலியானது குறையும்.
அல்சரைத் தடுக்கும்:
காலையில் சாப்பிடாமல் அலுவலகத்திற்கு செல்பவர்கள், தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், அல்சர் ஏற்படாமல் தடுக்கலாம்.
மெட்டபாலிசம்
அதிகரிக்கும்
காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை
குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிக் விகிதமானது 24 சதவீதம் அதிகரிக்கும். இதனால் உண்ணும் உணவானது
விரைவில் செரிமானமடைந்துவிடும்.
இரத்த
செல்கள் உற்பத்தியாகும்:
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், இரத்த சிவப்பணுக்களின் வளர்ச்சியானது அதிகரித்து, இரத்தமானது அதிகப்படியான ஆக்ஸிஜனை கொண்டிருப்பதால், உடலானது எனர்ஜியுடன் இருக்கும்.
எடையை குறைக்க
உதவும்:
எடையை குறைக்க நினைப்பவர்கள், அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், உடலில் தங்கியுள்ள நச்சுக்களுடன், உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதால் தேவையற்ற கொழுப்புக்களும் கரைந்து வெளியேறி, உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.
பொலிவான சருமத்தைக் கொடுக்கும்:
குடலானது சுத்தமாக இல்லாவிட்டால், முகத்தில் பருக்கள் வர ஆரம்பிக்கும். இப்படி பருக்கள் வந்தால் சருமமானது அழகை இழந்துவிடும். எனவே தினமும் தண்ணீரைக் குடித்து வந்தால், குடலியக்கம் சீராக நடைபெற்று, முகம் பருக்களின்றி பொலிவோடு இருக்கும்.
ஆயுர்வேத முறைப்படி
தண்ணீர் எப்படி குடிக்க வேண்டும்?
1. தண்ணீரை எப்போது குடித்தாலும்
அவசர அவசரமாக குடிக்கக் கூடாது. கொஞ்சம் கொஞ்சமாக நிதானமாக குடிக்க வேண்டும்.
2. நின்றபடியே தண்ணீர் குடிக்கக்
கூடாது. அமர்ந்து கொண்டு குடிக்க வேண்டும்.
3. தண்ணீரை அதிக சூடாகவோ அதிக
குளிர்ச்சியாகவோ குடிக்கக் கூடாது. அப்போதைய தட்பவெப்ப நிலையின் படி, தண்ணீர் இயற்கையான குளிர்ச்சியில் எப்படி இருக்கிறதோ அதை குடிக்க
வேண்டும். அல்லது, காய்ச்சிய தண்ணீரை
வெதுவெதுப்பாக குடிப்பது நல்லது.
4. குழாயில் இருந்து நேரடியாக
தண்ணீர் குடிக்கக் கூடாது. மண் பானை, காப்பர் பாத்திரம், ஸ்டீல் ஆகிய பாத்திரங்களில் அல்லது குடங்களில் தண்ணீர் சேகரித்து
வைத்து அதிலிருந்து தான் குடிக்க வேண்டும்.
5.உணவு சாப்பிடுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு தண்ணீர் குடிக்கலாம்.
அதிகாலையில்
தண்ணீர் குடிக்கரதலா இவ்வளவு நன்மைகள் இருக்கு,அதனால நாம நம்ம குழந்தைகளுக்கு இந்த
மாதிரி சின்ன சின்ன விசியங்கள , சிறு வயதில் இருந்து கத்துகுடுக்கணும்.
"நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்"
0 Comments